ஈரோடு, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,994 கன அடியாக அதிகரிப்பு..!

ஈரோடு, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,994 கன அடியாக அதிகரிப்பு..!

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (அக்.8) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,994 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (அக்.8) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,994 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இவ்வணை மூலம் ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று (அக்.7) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,994 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (அக்.8) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,994 கன அடியாக அதிகரித்துள்ளது. அப்போது, அணையின் நீர்மட்டம் 87.44 அடியாகவும், நீர் இருப்பு 19.96 டிஎம்சியாகவும் இருந்தது.

அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு 600 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 3,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story