/* */

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த எம்எல்ஏ

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த எம்எல்ஏ
X

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீரை திறந்த வைத்த எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 100 நாட்களுக்கு தண்ணீரை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம், அந்தியூர் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள வாய்க்கால்களில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.


அதனைத்தொடர்ந்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இதில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது எம்எல்ஏ வெங்கடாசலம் , விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். 108 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது இன்றிலிருந்து (மார்ச்.05) வரும் ஜூன் 12-ம் தேதி வரை மொத்தம் 100 நாட்களுக்கு திறந்து விடப்படவுள்ளது.

இதன்மூலம், வரட்டுப்பள்ளம் அணையின் புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் மைக்கேல்பாளையம் கிராமங்களில் உள்ள 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிட்டு பயனடைந்து கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


டைபெற்ற நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் தமிழ்பரத், பாசன விவசாய சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், இளைஞர் அணி வைத்தீஸ்வரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...