பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு
X

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியில் இருந்து 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

நேற்று (சனிக்கிழமை) காலை அணைக்கு நீர்வரத்து 14,901 கன அடியாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9,443 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 82.65 அடியிலிருந்து 83.28 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.48 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணை பகுதியில் 36 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ai as the future