அந்தியூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது

அந்தியூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது
X

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்

அந்தியூர் பகுதிகளில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சந்திபாளைத்தை சேர்ந்த வடிவேல் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் , அவரிடம் இருந்து எக்ஸ்பிரஸ் பிராந்தி - 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், தவிட்டுப்பாளையம் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பாலக்குட்டை பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து எக்ஸ்பிரஸ் பிராந்தி- 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
application of ai in agriculture