பவானிசாகரில் நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

பவானிசாகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததால் கைது செய்யப்பட்ட இரண்டு பேர்
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 16 நாட்டு வெடி குண்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யாசிங் தலைமையிலான போலீசார், பவானிசாகர் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முடுக்கன்துறை, தொட்டம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, தொப்பம்பாளையம் வனப்பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையில் அவர்கள் பவானிசாகர் தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 22),தாளவாடி சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது 25) என்பதும், அவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அவர்களிம் இருந்த ஒரு பையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் வன விலங்குகளை வேட்டையாட 16 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியது வின்சென்ட், நவீன் குமார் ஆகியோர் என தெரியவந்தது.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்ய பிரகாஷ், பூபதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய நவீன் குமார், வின்சென்ட் ஆகியோரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu