ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

பணியிட மாற்றம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் 12 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 12 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் துணை தாசில்தார், தாசில்தார் உட்பட பல்வேறு நிலை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலக கலைஞர் மகளிர் உதவித்தொகை தலைமை உதவியாளர் எம்.ஜமுனா ராணி ஈரோடு கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளராக பணியாற்றிய ஜி.பி.ஜாகிர் உசேன் நம்பியூர் தாசில்தாராக நியமிக்கப்பட் டார்.

நம்பியூர் தாசில்தார் அ.பொ.மாலதி ஈரோடு பெரியசேமூர் அலகு நகர நில வரித்திட்ட தனி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய தனி தாசில்தார் எஸ்.எஸ்.சக்திவேல் சத்தியமங்கலம் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் தாசில்தார் எஸ்.மாரிமுத்து தாளவாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும். இங்கு பணியாற்றிய என்.வெங்கடேஷ்வரன் கோபி குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) எஸ்.குமார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய ஏ.பானுமதி ஆட்சியர் அலுவலக அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தார் எஸ்.ஸ்ரீதர் கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்பாளர் கே.மகேந்திரன் பதவி உயர்வு பெற்று நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த சி.சந்திரசேகர் மொடக்குறிச்சி தாசில்தாராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மொடக்குறிச்சி தாசில்தார் எம்.இளஞ்செழியன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின அலுவலக தனி தாசில்தாராக (நிலம் எடுப்பு) மாற்றப்பட்டார்.

இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கே.நாராயணன் பெருந்துறை தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இங்கு பணியாற்றி வந்த கே.நல்லசாமி பெருந்துறை தாலுகா மண்டல துணை தாசில்தாராக பணி மாறுதல் பெற்று உள்ளார். இங்கு பணியாற்றிய ஆர்.ஏ.கமலக்கண்ணன் ஈரோடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த செல்வம் ஈரோடு தாலுகா மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

கோபி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் எம்.சந்திரன் நம்பியூர் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும். இங்கு பணியாற்றிய டி.ஆர்.விஜயகுமார் நம்பியூர் வட்ட வழங்கல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ப.கயல்விழி பதவி உயர்வு பெற்று கொடுமுடி தாலுகா தலைமையிட துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய ஆர்.சுபாஷினி கொடுமுடி வட்ட வழங்கல் அதிகாரியாகவும், இங்கு பணியாற்றிய வசந்த மனோகரி மொடக்குறிச்சி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய கே.லட் சுமி கோபி ஆர்.டி.ஓ. அலுவலக கலைஞர் மகளிர் உதவித்தொகை தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆட்சியர் அலுவலக ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.ரேவதி மொடக்குறிச்சி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய டி.மணிமேகலை கோபி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய என்.விஜயசாமுண்டீஸ்வரி கோபி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story