/* */

அந்தியூர் அருகே டிராக்டர் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே டிராக்டர் தொழிலாளி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே டிராக்டர் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
X

பர்கூர் காவல் நிலையம். உள்படம் மர்மமாக இறந்தவர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தேவர்மலை பாறையூரை சேர்ந்தவர் சிக்கண்ணன் மகன் நாகன் என்கிற சின்னராஜ் (வயது 32). இவர் டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி. சின்னராஜ் காலையில் வேலைக்கு சென்றால் இரவு நேரம் கடந்து வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு வேலைக்கு சென்ற சின்னராஜ் பின்னர், நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து, இன்று காலை சுதாமணி வேலைகளை முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, அந்த வீட்டினுள் சின்னராஜ் விட்டத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

பின்பு, உறவினர்கள் உதவியுடன் சின்னராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, சுதாமணி அளித்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 May 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!