பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.5) நீர்மட்ட நிலவரம்!

பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.5) நீர்மட்ட நிலவரம்!

Erode news- பவானிசாகர் அணை.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (செப்.5) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,257 கன அடியாக உள்ளது.

Erode news, Erode news today- பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (செப்.5) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,257 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட இந்த அணையின் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இவ்வணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று (செப்.4) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,289 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (செப்.5) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,257 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.39 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.16 அடியாக குறைந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.99 டிஎம்சியிலிருந்து 25.82 டிஎம்சியாக குறைந்துள்ளது.

மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2,300 கன அடி, பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி, காலிங்கராயன் பாசன பகுதிக்கு 200 கன அடி, அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு 750 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3,350 கன‌ அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story