ஈரோடு மாவட்ட அணைகளின் இன்றைய (மே.,19) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணை (பைல் படம்).
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 83.50 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.
இன்று (மே.,19) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர்மட்டம் - 83.16 அடி ,
நீர் இருப்பு - 17.41 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 1,064 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1,055 கன அடி ,
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 900 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என மொத்தம் 1,055 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
இதேபோல், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.17 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.95 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.44 அடியாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu