68 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

68 அடியை நெருங்கியது பவானிசாகர் அணை நீர்மட்டம்

Erode news- பவானிசாகர் அணைப்பகுதி.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 67.14 அடியிலிருந்து 67.79 அடியாக உயர்ந்தது.

Erode news, Erode news today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 67.14 அடியிலிருந்து 67.79 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

நேற்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,348 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (5ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,761 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 67.14 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 67.79 அடியை எட்டியது. விரைவில் 68 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர்இருப்பு 9.79லிருந்து 10.05 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் இருந்து 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story