கர்நாடக மக்களவைத் தேர்தல்: தாளவாடியில் டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் விடுமுறை..!

டாஸ்மாக் விடுமுறை.
கர்நாடக மக்களவைத் தேர்தலையொட்டி, தாளவாடியில் டாஸ்மாக் கடைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தமிழ்நாடு - கர்நாடகா எல்லையோரம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் மதுக்கடைகள் மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு கர்நாடக மாநில நாடாளுமன்றத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 26ம் தேதியன்று நடைபெறுகிறது.
இதையொட்டி, வரும் ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய தினங்களில் ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் கதவு எண். 5/1114, ராமபுரம் என்ற முகவரியில் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடை எண். 3948 மற்றும் அதனுடன் இயங்கும் பார் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu