/* */

அந்தியூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம்.பி. ஆறுதல்

பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில், காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம் பி.ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சுப்பராயன் எம்.பி. ஆறுதல்
X

விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் சுப்பராயன் எம்.பி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் நேற்று மாலை அரசு மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் எம்.பி. கே சுப்பராயன் அந்தியூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்து, தரமான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது வடக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி பி குணசேகரன் பாலமுருகன் அந்தியூர் வட்ட செயலாளர் தேவராஜன் கனகராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!