/* */

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை
X

அந்தியூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொய்யேரிகரை பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஒரு வருட காலமாக வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வரையிலும் பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் வருவாய்த்துறை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த அந்தியூர் துணை வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அந்தியூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாதையை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக, அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்ப்பட்டது..

Updated On: 26 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  4. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  5. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  7. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  8. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  9. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்