/* */

கோபி அருகே தம்பி மகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா உட்பட இருவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே தம்பியின் 13 வயது மகளை 3 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் பெரியப்பா உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அருகே தம்பி மகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா உட்பட இருவர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று, சிவக்குமார் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர் இதை வெளியில் கொலை செய்து கூறினால் விடுவதாக மிரட்டி சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறுமி பயந்துபோய் இதுபற்றி பெற்றோரிடம் கூறவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களாக சிறுமி சோர்வடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும், சிறுமியின் பெரியப்பா (சிறுமியின் தந்தையின் அண்ணன்) பச்சையப்பன் என்கிற குணசேகரன் (52) என்பவரும் கடந்த 3 மாத காலமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியின் பெரியப்பா குணசேகரன், வாசுதேவன் ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிவக்குமார், மோகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 2 May 2023 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  5. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  10. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...