ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக். 2 ல் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக். 2 ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக். 2 ல் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு
X

மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் செப். 28, அக்.2 ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மிலாடி நபி (28.09.2023) மற்றும் காந்தி ஜெயந்தி (02.10.2023) ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக' அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, 28.09.2023 மற்றும் 02.10.2023 ஆகிய இரு தினங்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், எப்எல்2 கிளப்கள் மற்றும் எப்எல்3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது.

மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Sep 2023 12:01 PM GMT

Related News