ஈரோட்டில் நாளை கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

ஈரோட்டில் நாளை கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் உள்ளார். அக்கட்சியின் விதிப்படி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பொதுக்குழு கூடி பொதுக்குழு உறுப்பினர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான 7-வது பொதுக்குழு கூட்டம் ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள பிளாட்டினம் மஹாலில் நாளை (மார்ச்.19) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று (சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

பின்பு அவர் அங்கிருந்து கார் மூலம், ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்குகிறார் பின்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கூட்டம் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் உட்பட 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சரத்குமாரை ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரன் மகாலிங்கம், பொருளாளர் சுந்தரேசன் ,கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் அரசியல் ஆலோசகர் லாரன்ஸ், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங்குளம் கணேசன் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் சின்னசாமி, குருநாதன் உள்பட பலர் கலந்து பங்கேற்க உள்ளனர். தற்போது, இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story