/* */

சலங்கபாளையம் 9வது வார்டு கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைவு

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

சலங்கபாளையம் 9வது வார்டு கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைவு
X

கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள்.

ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக சென்னி என்பவரது மனைவி திருமதி.நாச்சாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வார்டுக்கு உட்பட்ட அய்யங்காடு பகுதியில் இரண்டு தார் சாலைகள், கிருஷ்ணாபுரம் காலனியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி, 4 வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், பேரூராட்சி நிர்வாகம் 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் முன்னிலை அதிமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் நாச்சாள் கூறும்போது, கடந்த ஒரு வருடமாக 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித வளர்ச்சி திட்ட பணியும் நடைபெறாத நிலையில், பல முறை கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே, அதிமுகவில் இணைந்ததாக கூறினார்.

Updated On: 1 July 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!