/* */

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு

நம்பியூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் பத்திரங்கள் திருதப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
X
நம்பியூர் காவல் நிலையம்.

நம்பியூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 70). மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் கருப்புசாமி அவருடைய மனைவி இருவரும் வெளியே சென்று விட்டனர். பின்னர் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

அதில், இருந்து ரூ.70 ஆயிரத்தையும், வங்கி பத்திரங்களையும் காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் உடைத்து பணத்தையும், பத்திரங்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமி நம்பியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:45 AM GMT

Related News