/* */

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் சுடுகாடு வசதி கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூர் காலனியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல வருடங்களாக சுடுகாடு வசதி இல்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பிரம்மதேசம்புதூர் காலனியை சேர்ந்த செம்பன் என்பவரின் உடலை வைத்து அந்தியூர்-ஆப்பக்கூடல் சாலையில், திடீரென சுடுகாடு வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 22 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு