/* */

பெருந்துறை அருகே ஆலையில் பதுக்கிய 20 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெருந்துறை அருகே 5 பேர் கும்பல் கைது

பெருந்துறை அருகேஅரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட, 20.850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனர்

HIGHLIGHTS

பெருந்துறை அருகே ஆலையில் பதுக்கிய 20 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: பெருந்துறை அருகே 5 பேர் கும்பல் கைது
X

ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பெருந்துறை அருகே ஒரு அரிசி ஆலையில் 417 மூட்டைகளில், 20 ஆயிரத்து, 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்களுக்கு, அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கியதை உறுதி செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனன் பிக் அப் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி, நாட்டார்மங்களம் அக்ரஹார வீதி வெங்கடேஷ்‌ , தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பத்ரஹள்ளி, பூச்சூர் அஜீத்குமார்,பென்னாகரம், செல்லம்பூண்டி தாசனூர் பூபாலன் ,பென்னாகரம், பூச்சூர், ஆரல்குந்தி சின்னதம்பி,பெருந்துறை, வாவிகடை, பிச்சாண்டாம்பாளையம் கணபதி நகர் சென்னியப்பன், ஆகியோரை கைது செய்தனர். ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள அரிசி ஆலை உரிமையாளரான, பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 10 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...