/* */

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தை
X
இரை எதுவும் உள்ளதா என நோட்டமிட்டு உலாவிய சிறுத்தை.

தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உலாவிய சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், தாளவாடி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ள மல்குத்திபுரம்தொட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் தோட்டத்து வீட்டுக்கு வந்துள்ளது.

அங்கு இரை எதுவும் உள்ளதா? என்று நோட்டமிட்டது. ஆனால், அங்கு எதுவும் இல்லாததால் வீட்டின் வாசலுக்கு வந்தது. பின்னர், வீட்டு வாசலிலேயே உலாவி விட்டு பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

சிறுத்தை உலாவிய வீடியோ காட்சி பாக்கியலட்சுமி என்பவரது வீட்டின் முன்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. தற்போது அந்த வீடியோ வெளியாகிள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Updated On: 23 April 2024 1:49 AM GMT

Related News