/* */

பவானி அருகே வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 3 பேர்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காலிங்கராயன்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரபாளையம் காலிங்கராயன்பாளையம் மற்றும் பவானியை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் கூட்டாக சேர்ந்து கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டினுள் விற்பனைக்காக 42 பொட்டலங்களில் 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (24) , காலிங்ராயன்பாளையத்தை சேர்ந்த மெய்யப்பன் (19) மற்றும் பவானி பகுதியை சேர்ந்த அஜித் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு