ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஜூலை 13ல் ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும்  ஜூலை 13ல் ரேஷன் குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வரும் ஜூலை 13ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வரும் ஜூலை 13ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (8ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 13ம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொது மக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் எல்லப்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் சென்னிமலை எம்பிஎன் நகர் ரேஷன் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் நகராட்சி நகர் ரேஷன் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்க உள்ளது.

அதேபோல், கொடுமுடி வட்டத்தில் தாமரைப்பாளையம் ரேஷன் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கூகலூர் ரேஷன் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் ஒழலக்கோயில் ரேஷன் கடையில் பவானி சின்னபுலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது.

மேலும், பவானி வட்டத்தில் பெருந்தலையூர் ரேஷன் கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் பர்கூர் ஊசிமலை ரேஷன் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கொமராபாளையம் ரேஷன் கடையில் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் பழைய ஹாசனூர் ரேஷன் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story