ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினரின் ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினரின் ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி
X

ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சியின் போது எடுத்த படம்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ரமலான் மாத இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி தலைமையில், ஈரோடு மாவட்ட அரசு காஜி எம் முகமது கிபாயத்துல்லாஹ் பிரார்த்தனை ( துவா) செய்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் முனைவர் ஜெ.அஸ்லம் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் பொறியாளர் இ. மாப்பிளை மீரான் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அஹமது, வடக்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஏ ஜஹாங்கீர், மாவட்ட சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் கே என் பாஷா, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ்,உட்பட பலர்கலந்து கொண்டனர். பி.பெ.அக்ரஹாரம் டி எம் ஐ சபீர் அலி நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture