சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கொமராபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்.

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொமராபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியில் இணைக்க அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சியில் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு பறி போகும்.

மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் இருக்காது, வரி உயர்வு பல மடங்கு உயரும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், இன்று (7ம் தேதி) கொமராபாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். இந்த முற்றுகை போரட்டத்தால் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
Similar Posts
விஜயகாந்த் நினைவிடத்தில் நெஞ்சாத்தியே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
நாகர்கோவில், கோவை ரயில் சேவையில் மாற்றம்: சில ரயில்கள் பகுதியாக ரத்து
சென்னம்பட்டியில் ரூ.38.60 லட்சத்தில் சமுதாய கூடம் திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
எஸ்பிஐ-ல் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு..!
மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை..!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை
கவரப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி..!
ஈரோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 இளம் பெண்கள் உயிரிழப்பு
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
நீர் இருப்பில் கவலைக்கிடமான நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி..!