/* */

சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

சித்தோடு அருகே கடந்த மாதம் 23-ம் தேதி பெண் ஒருவரிடம் இருந்து மர்ம நபர்கள், பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக, சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று சித்தோடு போலீசார் பெருந்துறை வாவிகடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணவாளன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பதும், 2 பேரும் பெண்ணிடம் நகையை பறித்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 10 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து