Begin typing your search above and press return to search.
பிரம்மதேசம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை விற்றவர் கைது
பிரம்மதேசம்புதூரில் புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை அந்தியூர் போலீசார் பிரம்மதேசம் புதூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள புதருக்குள் பதுக்கி வைத்து, அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நகலூர் அருகே உள்ள பெருமாபாளையம் கள்ளுமேடுதோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.