கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்.

பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

பழுதடைந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொண்டப்பநாயக்கன்பாளையம் தெற்கு தோட்ட சாலையானது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது ஆகும். இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டி அந்தப் பகுதி விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் முறையிட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதற் கட்டமாக மனு கொடுப்பது, அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக கே.என்.பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அப்போது, அமைப்புச் செயலாளர்கள் ஜோதி அருணாச்சலம், சத்தியமங்கலம் நகரச் செயலாளர் குபேந்திரன், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், சத்தியமங்கலம் ஒன்றிய அவை தலைவர் சோமசுந்தரம் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
அந்தியூரில் நாளை ஈரோடு-சேலம் மாவட்ட விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
கே.என்.பாளையம் பேரூராட்சி தலைவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு
கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட கோரி ஆட்சியரிடம் மனு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமனம்
இந்தியா முழுவதும் பந்தயம் என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய கும்பல் கைது
ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 564 மனுக்கள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரசியல் சாசனத்தை மீறிய டெல்லி முதல்வர் அதிஷி: கெஜ்ரிவாலிற்காக காத்திருக்கும் நாற்காலி
போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருடன் டேட்டிங் செல்லும் வேதாங் ரெய்னா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்பறைக்கு அப்பால் கற்றல் நிகழ்வு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு மாவட்டத்தில் 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 74 போலீசார் பணியிட மாற்றம்
கணவர் ரன்பீர் கபூரை உளவு பார்த்த ஆலியா பட்: இந்தி பட உலகில் நடந்த சுவாரஸ்யம்
பரிதாபத்தின் உச்சத்தில்  உலகின் வளமான நாடு: போரால் அகதிகளாக மாறும் மக்கள்