/* */

செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்

பெருந்துறையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவி மாயம்
X

பைல் படம்.

பெருந்துறை திலகர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி. சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், தாரணி என்கிற பூஜா (வயது 15) என்ற மகளும் உள்ளனர். தாரணி பெருந்துறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தாரணி வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் செல்போனில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பூங்கொடி மகள் தாரணியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பூங்கொடி வேலைக்கு சென்று விட்டார். 10 மணிக்கு தாரணி தனது தாய் பூங்கொடிக்கு போன் செய்து தான் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் தாரணி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பூங்கொடி மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க