/* */

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 4 பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

அந்தியூர் வருவாய் வட்டாரத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டாரத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அந்தியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும், அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு பேரூராட்சி திருமண மண்டபத்திலும், அம்மாபேட்டை உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சனிசந்தை கொங்குதிருமகள் மண்டபத்திலும், பர்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமரைக்கரையில் உள்ள சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் இலவச வீடு , பட்டா பெயர் மாற்றம், சாதிசான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று, குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல் போன்ற இனங்களுக்கு உரிய படிவத்தில் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தொடர்புடைய அலுவலரிடம் மனு செய்து சான்று பெறலாம். முகாமில் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்‌ ஏ.ஜி.வெங்கடாசலம் கேட்டுகொண்டுள்ளார்.

Updated On: 19 July 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா