வெள்ளக்காடான பெருந்துறை: முழங்கால் வரை தேங்கிய நீரால் தத்தளித்த மக்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வெள்ளக்காடான பெருந்துறை: முழங்கால் வரை தேங்கிய நீரால் தத்தளித்த மக்கள்
X

பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது.

பெருந்துறையில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும், ஒரு சில இடங்களில், கனமழையும், பல இடங்களில் லேசாகவும் பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து, குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், மக்கள் நிம்மதி அடைகின்றனர்.


இந்நிலையில், திங்கட்கிழமை (செப்.25) இன்று வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதையடுத்து, மாலையில் சுமார் 5 மணியளவில் மழை பெய்யத் துவங்கியது. குறிப்பாக, பெருந்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் பணிக்கு சென்று மாலை நேரம் வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சாலைகளில் நகர முடியாமல் முடியாமல் தத்தளித்தனர்.


மேலும், தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பெண்கள், நடந்து செல்வோர் முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் முகம் சுழித்தவாறு சிரமத்துடன் நடந்து சென்றனர்.

Updated On: 25 Sep 2023 3:27 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  3. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  4. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  5. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  6. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  7. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  8. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  9. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி