ஈரோட்டில் தலித் விடுதலைக் கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்..!

ஈரோட்டில் தலித் விடுதலைக் கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்..!

தலித் விடுதலை கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் தலித் விடுதலை கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

Erode News, Erode Today News, Erode Live Updates - ஈரோட்டில் தலித் விடுதலை கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

தலித் விடுதலை கட்சி சார்பில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பிறகு, சுமார் 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது, தலித் விடுதலை கட்சியின் மாநில அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சமுதாய நல அறக்கட்டளை தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான விநாயக மூர்த்தி கலந்து கொண்டு 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

இதில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் வீரக்குமார், மேற்கு மண்டல செயலாளர் செல்வம், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி மற்றும் கோபி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story