மண்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள்! சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!

மண்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள்!   சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!
X

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கனகராஜ், 

அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என உங்களுக்கு தெரிய வரும்

மண்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள்! சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்! சளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும்! உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

மண்பானை நீர்- 7- 8 pH அளவு, இரத்தத்தில் pH அளவும்: எலும்பு,மூட்டு வலியும்: மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான். இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது.(Alkaline).

நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது. ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது.இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது. இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு. R.O.WATER - 5 - 6 pH அளவு.காபி - 4.5 -5.5 pH அளவு.மண்பானை நீர் - 7- 8 pH அளவு.R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.

தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கப்படுகின்றன. அதுபோல தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்கின்றனர். இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும். எல்லா காலத்திலும் மண் பானை நீரை மட்டுமே குடிக்க பயன்படுத்தலாம்.



வெயில் தாக்கத்தில் இருந்து காக்கும் வகையில் மண் பிரிட்ஜ், மண் ஜக்கு, மண் வாட்டர் பாட்டில், பைப் வைத்த மண்பானைகள் என தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட முகாசி அனுமன்பள்ளியைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கனகராஜ், கோடை காலத்திற்கு எற்ப பைப் வைத்த மண் பானைகள் ஒரு லிட்டர் முதல் 50 லிட்டர் வரையுள்ள மண் பானைகள், வெப்ப நிலை தாக்கத்தை குறைக்கும் வகையிலும் ஒரு வாரம் வரை பொருட்கள் கெடாமல் இருக்கும் வகையில் மண் பிரிட்ஜ், வாட்டர் பாட்டில், மண் ஜக்கு, மண் அண்டா, மண் டம்ளர் உள்ளிட்ட கோடை காலத்தில் வெப்பத்தை தடுக்கும் வகையிலான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து மண்பாண்ட கலைஞர் கனகராஜ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் காலத்திற்கு ஏற்றார்போல் மண் பாண்டத்தில் சில்வர் பாத்திரங்களுக்கு இணையாக மண் பாண்டத்திலும் உற்பத்தி செய்து வருகின்றோம். தற்போது கோடை காலத்தில் வெப்ப நிலையை கட்டுப்படுத்தி குளிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து விர்பனை செய்து வருகின்றோம். மண் பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து அதனை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் அதேபோல் எளிதில் உடையாமல் இருக்கும் வகையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

இதில் பிரிட்ஜில் வைக்கும் அனைத்து பொருட்களையும் மண் பாண்டத்தில் வைக்கும் வகையில் மண் பிரிட்ஜ், ஒரு லிட்டர் முதல் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைப் வைத்த மண் பானைகள், மண் ஜக்கு, மண் டம்ளர் போன்ற வெப்ப நிலையை தடுத்து குளிவிக்கும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்றார்.


Tags

Next Story