/* */

குப்பை கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே, பாறைக்குழியில் கொட்டுவதற்காக குப்பைகழிவுகளை ஏற்றி வந்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அம்மன் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாறைக்குழி உள்ளது.

இதனை மூடுவதற்காக, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுகளை லாரிகள் மூலம் எடுத்து வந்து பாறைக்குழியை மூடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்ததுள்ளது.

இவ்வாறு பாறைக்குழியில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் கலந்து விடுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் குப்பை கழிவுகளை ஏற்றி வந்த 8 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் கூறுகையில், அம்மன்நகர், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள் போன்றவற்றில் குப்பைகள் கலந்து குடிநீர் மாசு ஏற்படுகிறது.

ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றியும் இனிமேல் குப்பை கழிவுகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைக எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 11 Jun 2021 2:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’