பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா

X
குத்துவிளக்கு ஏற்றிய எம் எல் ஏ சரஸ்வதி.
By - S.Gokulkrishnan, Reporter |25 Nov 2021 4:15 PM IST
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோட்டில் கரூர் பைப்பாஸ் ரோடு பச்சபாளியில் பா.ஜனதா கட்சியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூரிலிருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திறந்து வைத்தனர். காணொலி காட்சி மூலம் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றதையடுத்து மொடக்குறிச்சி சி.சரஸ்வதி. எம்.எல்.ஏ குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தாங்கினார். அதனை தொடர்ந்து கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu