Begin typing your search above and press return to search.
மாடு வாங்க கொண்டு வரப்பட்ட 1.30 லட்சம் பறிமுதல்
மொடக்குறிச்சி அருகே மாடு வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடு - கரூர் ரோடு சோளங்கபாளையம் என்ற இடத்தில் பறக்கும்படை அதிகாரி சண்முகம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ள தோட்டாவாடி, மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி, என்பவர் தனது வாகனத்தில் மாடு வாங்குவதற்காக ஈரோடு மாட்டு சந்தைக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.