Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையம் கருணை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கோபிசெட்டிபாளையம் ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பிரியாணி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபி குழந்தைகள் காப்பகமான கருணை இல்லத்தில், இன்று குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அந்தியூர் கெட்டிசமுத்திரம் முன்னாள் திமுக ஊராட்சி செயலாளர் நாகராஜ், முன்னாள் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், முரளிதரன் ஆகியோர் , முதல்வர் பிறந்த நாளையொட்டி, கோபி கருணை இல்லத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் துண்டு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.