ஈரோட்டில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவு

ஈரோட்டில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவு

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில், புதிதாக நியமிக்கப்பட்ட பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன ஆணையினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை அமைச்சர் முத்துசாமி இன்று (25ம் தேதி) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய, இத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்திற்கு மாவட்ட அறங்காவலர் நியமனம் குழு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களால் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி பொறுப்பேற்று, அறங்காவலர் குழு கூட்டம் 12 முறை நடைபெற்றது. இதில், 468 தீர்மானம் இயற்றப்பட்டு, 389 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கடைசியாக நடைபெற்ற 3 அறங்காவலர் குழு கூட்டத்தின் மூலம் 56 கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25ம் தேதி) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார் உட்பட உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
ராணுவ சிறைக்காவலில் பாகிஸ்தான் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஃபைஸ் ஹமீத்
ஜூனியர் என்.டி.ஆரின் தேவ்ரா படம் 2 நாள் முன்பதிவில் அள்ளிய வசூல்
இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் பாகிஸ்தான் அல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
நேபாள எல்லையில் இந்தியாவிற்கு ஆபத்து: பாகிஸ்தான் தயாரிப்பில் 2500 ஜிஹாதிகள்
சீனா வெற்றிகரமாக  பரிசோதனை செய்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
என்டிபிசி நிறுவனத்தில் துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோட்டில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவு
ஈரோடு அரசு மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்
ஈரோட்டில் காதில் பூ வைத்து நூதனமான முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலத்துக்கு கடத்தப்பட்ட ரூ.9.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 40 பேருக்கு பணி ஆணை