/* */

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாட்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், மொத்தம் 50,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன், இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டபொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 883 மையங்களில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களாக காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக மொத்தம் 50,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,788 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 100 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

Updated On: 15 Nov 2021 12:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’