அந்தியூர் போக்குவரத்து பணிமனையில் மே தின கொண்டாட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
விழாவில் பேசிய அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
நாடு முழுவதும் மே 1ஆம் தேதியான இன்றைய தினத்தை தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளையில், தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை சார்பில், பணிமனை கிளை முன்பு மே தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்துகொண்டு, கொடியேற்றி இனிப்பு வழங்கி தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தயாராக உள்ளது என்றும் பேசினார். மே தின நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், சிறுபான்மை மாவட்ட அமைப்பாளர் செபஸ்தியான், அந்தியூர் தொமுச செயலாளர் அர்ஜுனன் தலைவர் செந்தில் பொருளாளர் ரங்கநாதன் மண்டல சங்க துணை தலைவர் வேலுமணி அருள் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu