/* */

அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு

அந்தியூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏரியில் கொட்டி அழித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிப்பு
X

மது பாட்டில்கள் போலீசார்  ஏரியில் கொட்டி அழித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையம் மற்றும் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்றவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கோபி கலால் வட்டாட்சியர் தியாகராஜன் முன்னிலையில் அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் மது பாட்டில்களை அந்தியூர் பெரிய ஏரியில் போட்டு உடைத்தனர். இதில் கடந்த ஆறு மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் நேரத்தில் போலீசார் பிடித்த மது பாட்டில்களை உடைத்த சம்பவம் பொதுமக்களிடத்திலே பெரும் வரவேற்பை பெற்றது.

Updated On: 5 July 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  2. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  3. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  4. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  5. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  6. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  9. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  10. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...