3,000 கிலோ பப்பாளி பழம் தேவை: ஈரோடு அவல்பூந்துறை விற்பனை கூடம் அறிவிப்பு

பப்பாளி பழங்கள்.
மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3,000 கிலோ பப்பாளி பழம் கொள்முதல் செய்ய தேவை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக் குழு மூலமாக அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விளை பொருட்கள் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, 3,000 கிலோ பப்பாளி பழம் கொள்முதல் செய்யத் தேவையாக உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பப் பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இடைத்தரகர்கள் இன்றி, கூடுதல் விலைக்கு தங்களது பப்பாளி பழங்களை அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யலாம்.
அல்லது உங்கள் பண்ணை வாசலிலேயே கொள்முதல் செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும் விவரங்களுக்கு விற்பனை கூட கண்காணிப்பாளரை 9080880499, 7200918146 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நல்ல வாய்ப்பை பப்பாளி சாகுபடி செய்துள்ள ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பப்பாளி பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல பயன் அடையும்படியும் ஒருங்கு முறை விற்பனை கூடம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu