ஈரோடு விஐடி கலை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள்

Erode news- வெற்றிக் கோப்பையை சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரி பெற்றது.
Erode news, Erode news today- ஈரோடு விஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடை பெற்றன.
விஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யுகா-2024 கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் வேளாளர் கல்விக் குழுமங்களின் தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
விஇடி ஐஏஎஸ் முதன்மைக் கல்வி ஆலோசகர் பால சுப்ரமணியம் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். கல்லூரி நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார்.
இதில் ஒரே நேரத்தில் வெவ்வேறு அரங்குகளில் திறன் நிகழ்த்துகை, நவீன ஆடை நடைக்காட்சி, சமையல், ஒரு நிமிடக் குறும்படம், சாயமிடல், முகச்சாயமிடல், மெஹந்தி, ஒளிப்படம், தனி நடனம், இருவர் நடனம், குழு நடனம், பாடுதல், இசைக்கருவிகள் வாசித்தல், திறன்கள் வெளிப்பாடு மற்றும் பிற கலை போட்டிகள் நடைபெற்றன.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 கல்லூரிகளிலிருந்து 1,200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையை சேலம், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது. மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் கலைவாணி விழா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu