பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 144 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 144  கன அடியாக சரிவு
X

பவானிசாகர் அணை (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 144 கன அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர் வரத்தும் குறைந்து உள்ளது.

இன்று (ஜூன்.,07) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 81.13 அடி ,

நீர் இருப்பு - 16.29 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 144 கன அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 955 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 800 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என மொத்தம் 955 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story