அந்தியூர் பகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பு

Erode news- அந்தியூர் ரவுண்டானாவில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன். உடன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளார்.
Erode news, Erode news today- அந்தியூர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மங்களம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் இருந்து துவங்கி அந்தியூர் ரவுண்டானா, காவல் நிலையம் பிரிவு, அரசு மருத்துவமனை பிரிவு, தேர் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் ஏ.சி.பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கு.ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஷாநவாஸ், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பொன்னுசாமி, காங்கிரஸ் கட்சி முன்னாள் வட்டாரத் தலைவர் நாகராஜா, சிபிஎம் வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu