/* */

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

அந்தியூரில் கம்யூனிஸ்ட் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், வனச்சரக அலுவலகம் எதிரே வசித்து வருபவர் பழனிச்சாமி. அந்தியூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரான இவர், நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாததை கண்காணித்து வந்த மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிலிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் வீட்டிற்கு வந்த பழனிச்சாமி பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 18 Aug 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  4. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  6. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  8. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  9. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  10. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...