கோபி: போதை பொருள் விற்பனை மளிகை கடைக்காரர் கைது

X
By - S.Gokulkrishnan, Reporter |5 Dec 2021 3:45 PM IST
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்காரர் கைது.
கோபி வாய்க்கால் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று மளிகைக் கடையில் சோதனை செய்தனர். அப்போது, கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடையிலிருந்த 15 பாக்கெட் புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் சாமுவேல் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu