/* */

கோபி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோபி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மகனுடன் மனைவி தற்கொலை முயற்சி
X

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். ஸ்பின்னிங் மில் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஹரிபுவனேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடன் தொல்லையால் லோகநாதன் விஷம் குடித்தார். பின்னர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து, கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பத்மாவதி இன்று காலை விஷம் குடித்து மகனுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தற்போது, இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?