/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
X

பைல் படம்

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர தினம் (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது

கிராம சபைக் கூட்டதின் நோக்கம் என்பது ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் ஆகியவையே

கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் என்பது கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்

இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நாளை காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப்பணிகள், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பெறுதல், 100 நாள் வேலை திட்ட அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞரின் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் மற்றும் இதர பொருட்கள் பற்றி விவாதிக்கப்படும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கும்படி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 1 Oct 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...