/* */

ஈரோடு ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
X

மழலையர் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால், ஈரோடு - கரூர் சாலையில் கேட்புதூரில் இயங்கி ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளி மழலையர் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொலைநோக்கு பார்வையோடு கல்வியில் உயர வழிகாட்டும் பொருட்டு, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

விழாவுக்கு பள்ளியின் தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். செயலாளர் ராதா, பள்ளியின் முதன்மை கல்வி அலுவலர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆர்டி நிறுவன தலைவர் செந்தில்குமார் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மழலையர் வகுப்பு முடித்த மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பள்ளியின் ஆசிரியை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் முதல்வர் சங்கர் செய்திருந்தார்.

Updated On: 18 Feb 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  2. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  3. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  7. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  8. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  10. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!